sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை

/

வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை


ADDED : ஜூலை 26, 2024 04:32 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் வீட்டின் கதவை உடைத்து, 5 சவரன் நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புவனகிரி கவரப்பாளையம் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன், 62; புவனகிரி போலீஸ் நிலையம் அருகில் செந்தில் ஆப்செட் பிரஸ் நடத்தி வருகிறார். இவர், கடந்த 21 தேதி, இரவு குடும்பத்துடன் வெளியூர் சுற்றுலா சென்றார். நேற்று அதிகாலை திரும்பி வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ௫ சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து புவனகிரி போலீசில் தியாகராஜன் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தயடங்கள் சேகரித்தனர்.

இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவ வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புவனகிரி அடுத்த மணவெளியில் வீட்டின் ஓட்டை பிரிந்து 20 சவரன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us