sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருமண வரவேற்பு விருந்தில் சாப்பிட்ட மணமகள் உள்ளிட்ட 50 பேருக்கு வாந்தி, பேதி

/

திருமண வரவேற்பு விருந்தில் சாப்பிட்ட மணமகள் உள்ளிட்ட 50 பேருக்கு வாந்தி, பேதி

திருமண வரவேற்பு விருந்தில் சாப்பிட்ட மணமகள் உள்ளிட்ட 50 பேருக்கு வாந்தி, பேதி

திருமண வரவேற்பு விருந்தில் சாப்பிட்ட மணமகள் உள்ளிட்ட 50 பேருக்கு வாந்தி, பேதி


ADDED : ஜூலை 14, 2024 06:14 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில், : திருமண வரவேற்பில், விருந்து சாப்பிட்ட மணமகள் உட்பட 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த பழஞ்சநல்லுார் கிராமத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இங்கு விருந்து சாப்பிட்ட பலருக்கு நேற்று காலை வாந்தி, பேதி ஏற்பட்டது.

தகவலறிந்த வீராணந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தங்கதுரை தலைமையிலான மருத்துவக்குழுவினர், பழஞ்சநல்லுார் கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை மேற்கொண்டனர். 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்ததால், மணமகள் அட்சயா, 20; மணவெளி வாசகி, 42; சித்தார்த்,19; ரவி,47; நிலா,14; ஹரிஷ்,25; வேம்பு, 50;சம்யுக்தா,8; காஞ்சனா,30; விஜயா,4; உட்பட 50க்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்சில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தலைமை மருத்துவர் ஜெயச்செல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 4 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சப் கலெக்டர் ராஷ்மிராணி, மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரவிக்குமார், தி.மு.க., கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன், பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

முதல்கட்ட விசாரணையில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டதால் வாந்தி, பேதி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us