/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
60 சவரன் நகை திருட்டு வழக்கு நெய்வேலியில் ஒருவர் கைது 27 சவரன் நகைகள் மீட்பு
/
60 சவரன் நகை திருட்டு வழக்கு நெய்வேலியில் ஒருவர் கைது 27 சவரன் நகைகள் மீட்பு
60 சவரன் நகை திருட்டு வழக்கு நெய்வேலியில் ஒருவர் கைது 27 சவரன் நகைகள் மீட்பு
60 சவரன் நகை திருட்டு வழக்கு நெய்வேலியில் ஒருவர் கைது 27 சவரன் நகைகள் மீட்பு
ADDED : மே 10, 2024 12:39 AM

நெய்வேலி: நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை திருடிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி, என்.ஜே.வி., நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வெற்றிச்செல்வம். கடந்த பிப்., 25ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 60 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சங்கராபுரம் போலீசார் வேறு ஒரு குற்ற வழக்கு தொடர்பாக உளுந்துார்பேட்டை அடுத்த கூவகத்தை சேர்ந்த கோபால் மகன் மாரிமுத்து என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவருக்கு டவுன்ஷிப் நகை திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், அவரிடம் டவுன்ஷிப் போலீசார் விசாரித்தனர்.
அதில், புவனகிரி அடுத்த எல்லைக்குடியை சேர்ந்த ராமர் மகன் ராஜசேகர்,33; நகை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும் அவரிடம் நகைகள் இருப்பதும் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார், ராஜசேகரை நேற்று பிடித்து விசாரித்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில் கடலுார் பாதிரிக்குப்பத்தில் அவரது பெரியம்மா வீட்டில் புதைத்து வைத்திருந்த 27 சவரன் நகைகளை மீட்டனர். தொடர்ந்து ராஜசேகரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.