ADDED : ஏப் 18, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், கோண்டூரை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி கவுரி,58; இவர், நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு புதுச்சேரியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
மாலை மீண்டும் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்திருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைந்திருந்தது.
அதில் வைத்திருந்த 19 சவரன் நகைகள் திருடு போயிருந்தது. அதன் மதிப்பு ரூ. 9 லட்சம். கடலுார், புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

