ADDED : செப் 09, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த, இராமநாதன்குப்பம், அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர், லட்சுமணன் மகன், கலைமணி, 37.
இவர் கடந்த, 5ம் தேதி பைக்கில் சிலிண்டரை வைத்து, கடலூர் விருத்தாச்சலம் சாலையில் சென்றார். பெரியகாட்டுசாகை அருகே சரக்கு வாகனம் ஒன்று, பைக் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த கலைமணியை புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.