/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கிட்டு தற்கொலை
/
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கிட்டு தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கிட்டு தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கிட்டு தற்கொலை
ADDED : மே 28, 2024 08:34 PM

பண்ருட்டி,;கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமரவேல், 32; டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி பிரிந்து சென்று விட்டார். அதையடுத்து, இரண்டாவதாக அதே ஊரை சேர்ந்த குருசாமி மகள் மீனா, 20; என்பவரை, ஓராண்டுக்கு முன், திருமணம் செய்து கொண்டார்.
குமரவேல் - மீனா தம்பதி வீட்டு மாடியிலும், குமரவேல் பெற்றோர் தரை தளத்தில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்க சென்ற குமரவேல், மீனா நேற்று காலை வெகுநேரமாகியும் வௌியே வரவில்லை.
சந்தேகமடைந்த குமரவேல் தாய் பொற்கொடி, சென்று பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் ஒரே சேலையில் துாக்கு போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்த காடாம்புலியூர் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.