/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
/
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
ADDED : ஆக 04, 2024 09:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி:கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வீரமணி, 26. இவர், தன் வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ராமநத்தம், திட்டக்குடி போலீசார் நேற்று மாலை 3:00 மணியளவில் வீரமணி வீட்டிற்கு சென்று சோதனையிட்டதில், தோட்டத்தில் 6 அடி உயரமுள்ள மூன்று கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதை உறுதி செய்தனர். அதையடுத்து, வீரமணி மீது ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.