ADDED : மே 24, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்,: பெண்ணாடம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று மாலை 5:00 மணியளவில் பெண்ணாடம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, நந்திமங்கலம், ஏரிக்கரை மேடு பகுதியில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வேப்பூர் அடுத்த நாரையூர், கிழக்கு தெருவைச் சேர்ந்த சேகர், 36, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.