ADDED : மே 13, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: திருட்டு வழக்குகளில் பலமுறை சிறை சென்றவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டை சேர்ந்தவர் அறிவழகன், 42. இவர் கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைதாகி பலமுறை சிறை சென்றவர்.
கடந்த 10ம் தேதி அறிவழகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த அறிவழகன் பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.