/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கந்தலான தார் சாலை; வாகன ஓட்டிகள் அவதி
/
கந்தலான தார் சாலை; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 16, 2024 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் குடியிருப்பு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரில், ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக மாறி ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி குடியிருப்பு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.