ADDED : ஜூன் 25, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரை சேர்ந்தர் கோவிந்தராஜ் மகன் ஆனந்த், 39. இவர்,கடந்த 21ம் தேதி விருத்தாசலத்தில் இருந்து மணவாளநல்லுார் நோக்கி பைக்கில் சென்றார். மணவாளநல்லுார் அருகே சாலையோர மின் கம்பத்தில் பைக் மோதி ஆனந்த் படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்பரில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார்.
விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.