/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புத்தேரி மகா மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
/
புத்தேரி மகா மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
புத்தேரி மகா மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
புத்தேரி மகா மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ADDED : ஆக 02, 2024 10:37 PM

பெண்ணாடம், - பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு ஆடி 3ம் வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம்; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.