ADDED : ஆக 08, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று ஆடிப்பூரம் முன்னிட்டு உற்சவர் பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று ஆடிப்பூரம் முன்னிட்டு காலை 5:00 மணிக்கு நடைதிறப்பு, 7:00 மணிக்கு நித்யபடி பூஜை, 8:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 10:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.
மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடும், இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.