sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு பண்ருட்டி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

/

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு பண்ருட்டி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு பண்ருட்டி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு பண்ருட்டி நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு


ADDED : ஜூன் 28, 2024 01:03 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: தங்களின் வார்டுகளில் எந்த பணியும் ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து, பண்ருட்டி நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பண்ருட்டி நகரமன்ற இயல்பு கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

துணை சேர்மன் சிவா, கமிஷ்னர் ப்ரீத்தி, பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது. அப்போது பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர் மோகன், எனது வார்டில் நந்தனார் காலணியில் எந்த பணியும் நடக்கவில்லை. அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டு என்பதால் புறக்கணிக்கிறீர்கள் என, குற்றம் சாட்டினார். மேலும், ஆவேசமாக பேசிய அவர், சேர்மன் நாற்காலி எதிரில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது தி.மு.க.., கவுன்சிலர்கள் ராமலிங்கம், ஆனந்தி, சண்முகவள்ளி பழனி ஆகியோர், அவை நடவடிக்கைக்கு அ.தி.மு.க., கவுன்சிலர் குந்தகம் ஏற்படுத்துகிறார். இதனால் மற்ற வார்டு பிரச்னை பேச முடியாத நிலை ஏற்படுகிறது என்றனர்.

இந்நிலையில், நகராட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர் வார்டுகளில் எந்த பணியும் நடைபெறவில்லை. புறக்கணிக்கப்படுகிறது என, குற்றம் சாட்டி, அ.தி.மு.க கவுன்சிலர்கள் மோகன் தலைமையில் சரளாமோகன், சரண்யா, சுவாதி, முருகன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us