நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டில் துாங்கிய மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஆனந்தன், 26. கடந்த 6ம் தேதி ஆனந்தன் வழக்கம்போல் வீட்டில் அருகே துங்கினார். காலை எழுந்து பார்த்தபோது அவரை காணவில்லை.
புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்தனை தேடி வருகின்றனர்.

