sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சமூக விரோதிகள் கூடாரமான வேளாண் அலுவலகம்

/

சமூக விரோதிகள் கூடாரமான வேளாண் அலுவலகம்

சமூக விரோதிகள் கூடாரமான வேளாண் அலுவலகம்

சமூக விரோதிகள் கூடாரமான வேளாண் அலுவலகம்


ADDED : ஜூன் 19, 2024 01:21 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு, கடலுார் விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய தினசரி வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த வேளாண் உதவி இயக்குனர் அலுவலம், வேளாண் ஆராய்சி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதன்காரணமாக, மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் செயல்பட்டு வந்த வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் பயன்பாடின்றி கைவிடப்பட்டது.

இதனால், இந்த கட்டத்தில், இரவு நேரங்களில், கஞ்சா, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மார்க்கெட் கமிட்டிக்கு வரும் விவசாயிகள் அச்சமடைகின்றனர். எனவே, சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அகற்ற, மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us