/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 23, 2025 05:35 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அ.திமு.க., அலுவலகத்தில் மேற்கு மாவட்ட வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, வழக்கறிஞரணி மாவட்ட செயலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பொன் கொளஞ்சி முன்னிலை வகித்தார்.
மாநில ஜெ., பேரவை துணை செயலர் அருள் அழகன், நகர செயலர் சந்திரகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
வழக்கறிஞரணி நிர்வாகிகள் மணிவண்ணன், மகேந்திரவர்மன், ஜெயபிரகாஷ், காசி விஸ்வநாதன், மோகன்ராஜ், குமரேசன், ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், ஆனந்தகண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த, பொதுச்செயலர் பழனிசாமி, மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., விற்கு நன்றி தெரிவிப்பது.
வரும் 24ம் தேதி ஜெ., பிறந்தநாளில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. வரும் 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வை ஆட்சியில் அமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் செந்தில் சரவணன் நன்றி கூறினார்.