ADDED : ஆக 29, 2024 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மக்கள் மருந்தகம் சார்பில், கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்டெர்லைட் கண்டெய்னர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சென்ட்ரல் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
டாக்டர் முகமது யாசின், நடனசபாபதி முன்னிலை வகித்தனர். ஸ்டெர்லைட் கண்டெய்னரை முன்னாள் உதவி ஆளுநர் தீபக்குமார், மக்கள் மருந்தகம் கேசவன் ஆகியோர், கல்லுாரி புல முதல்வர் டாக்டர் திருப்பதியிடம் வழங்கினர். புல முதல்வர் நேர்முக உதவியாளர் வேல்ராஜ், ரோட்டரி நிர்வாகிகள் சீனிவாசன், பன்னாலால்ஜெயின், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செயலாளர் டேவிட் ஏகாம்பரம் நன்றி கூறினார்.

