sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புவனகிரி அருகே ஆம்புலன்ஸ் சிறைபிடிப்பு

/

புவனகிரி அருகே ஆம்புலன்ஸ் சிறைபிடிப்பு

புவனகிரி அருகே ஆம்புலன்ஸ் சிறைபிடிப்பு

புவனகிரி அருகே ஆம்புலன்ஸ் சிறைபிடிப்பு


ADDED : மே 02, 2024 11:22 PM

Google News

ADDED : மே 02, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அருகே சரியான நேரத்திற்கு வராததால், 108 ஆம்புலன்சை சிறைபிடித்து, டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புவனகிரி அருகே சாத்தப்பாடியை சேர்ந்தவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அப்பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து அழைத்துள்ளார்.

ஆனால், சரியான விலாசத்திற்கு செல்லாமல், இடம் மாறியதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் வந்தது. அதற்குள், உடல் நிலை சரியில்லாதவரை வேறு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறைபிடித்து, டிரைவர் சதீஷ்குமார், மருத்துவ உதவியாளர் கார்த்திகா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தகவலறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களை மீட்டு வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட டிரைவர் சதீஷ்குமார் கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us