ADDED : மே 30, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று கார்குடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், 74, என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 10 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.