sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாந்தி பேதிக்கு மேலும் ஒரு முதியவர் சாவு

/

வாந்தி பேதிக்கு மேலும் ஒரு முதியவர் சாவு

வாந்தி பேதிக்கு மேலும் ஒரு முதியவர் சாவு

வாந்தி பேதிக்கு மேலும் ஒரு முதியவர் சாவு


ADDED : மே 08, 2024 12:30 AM

Google News

ADDED : மே 08, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் திருவேங்கடம், 65; இவர், வாந்தி, பேதி காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். குள்ளஞ்சாவடியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அவர், சாப்பிட்ட பிறகே உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கிராம மக்களிடையே தகவல் பரவியது.

இதனால், திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்டவர்கள் பீதியடைந்தனர். கடலுார் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குள்ளஞ்சாவடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கு சேரந்தனர். இந்நிலையில், வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி, 60; நேற்று காலை இறந்தார்.

காலாவதியான மளிகை பொருட்களைக் கொண்டு, திருமண மண்டபத்தில் உணவு தயாரித்ததால் பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து இருவர் இறந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தது, புலியூர் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குள்ளஞ்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us