sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

/

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : மார் 01, 2025 07:02 AM

Google News

ADDED : மார் 01, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; சுற்றுச்சூழலில் முழுமையாக ஈடுபடுபவர்களுக்கு அரசு சாம்பியன் விருது, பணமுடிப்பு வழங்குகிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் 100 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும் வழங்க உள்ளது.

அதற்கு, சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு, பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், அது தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல், காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர் உள்ளாட்சி அமைப்பு தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மாநிலம் முழுவதிலும் 100 தனி நபர்கள் நிறுவனங்களை தேர்வு செய்ய உள்ளது. இதில் கடலுார் மாவட்டத்தில் 3 விருதுகள் தேர்வு செய்யப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவம் மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (WWW.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us