/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராணுவ இசைக் கலைஞர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
/
ராணுவ இசைக் கலைஞர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 30, 2024 05:26 AM
கடலுார்: பெங்களூருவில் நடக்கும், ராணுவத்தின் அக்னிவீர வாயு இசைக் கலைஞர் தேர்வில் இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் சார்பில் அக்னிவீர வாயு இசைக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பெங்களூரு 7வது ஏர்மேன் தேர்வு மையத்தில் வரும் ஜூலை 3ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை ஆட்சேர்ப்பு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், ஜூன் 5ம் தேதிக்குள் https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளம் வாயிலாக பதிவு செய்துக்கொள்ள வேண்டும். 2.1.2004 அல்லது இதற்கு பின்னர் பிறந்தவர்கள், 2.7.2007 அல்லது இதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு இசைக் கருவியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஆண்கள் 162 செ.மீ., உயரம், பெண்கள் 152 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.
இத்தகவலை கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.