/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துப்பாக்கி சுடும் போட்டி மாணவருக்கு பாராட்டு
/
துப்பாக்கி சுடும் போட்டி மாணவருக்கு பாராட்டு
ADDED : ஆக 02, 2024 10:56 PM

கடலுார், - தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்ற நெய்வேலி பெண் காவலரை எஸ்.பி.,ராஜாராம் பாராட்டினார்.
தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி கோயம்புத்துாரில் நடந்தது. இதில், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய தலைமை காவலர் ராஜேஸ்வரி, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு, 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் வெற்றி பெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும், இவரது மகன் மோனிஷ் 10 மீட்டர் எர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி பதக்கம், மகள் ரம்யா ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றனர். இரண்டாவது மகள் கிருத்திகா ஏர் ரைபில் பிரிவில் வெற்றி பெற்றார்.
பெண் காவலர் ராஜேஸ்வரி, மாணவர் மோனி ைஷ கடலுார் எஸ்.பி., ராஜாராம் பாராட்டினார்.