/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது இடத்தில் தகராறு: ஒருவர் கைது
/
பொது இடத்தில் தகராறு: ஒருவர் கைது
ADDED : ஆக 22, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி, பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி பங்களா பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் ஒருவர் குடிபோதையில் நின்று கொண்டு, அந்த வழியாக சென்ற பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், எதிர்த்து கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புவனகிரி போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், மேல்புவனகிரி கள்ளிக்காட்டு தெருவைச் சேர்ந்த நீதிதேவன்,40; என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து நீதிதேவனை கைது செய்தனர்.