ADDED : செப் 05, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : மதுபாட்டில் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, சுப்ரமணியபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றின் பின்புறம், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.
மதுபாட்டில் பதுக்கிய சுப்ரமணியபுரம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த, ஆறுமுகம், 56, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 5 மது பாட்டில்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.