/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.7 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது
/
ரூ.7 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது
ADDED : ஆக 18, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : நிலம் வாங்கி தருவதாக கூறி, பெண்ணிடம் ரூ. 7 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம், மின் நகரை சேர்ந்தவர் டெய்சி, 47; இவரிடம், பூலாமேடு கீழ்தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனிவேல்,40; என்பவர், கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 7 லட்சம் பணம் வாங்கினார். ஆனால், நிலமும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து டெய்சி கொடுத்த புகாரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பழனிவேலை கைது செய்தனர்.

