ADDED : மே 02, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தேய்பிறையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதையொட்டி, நேற்று காலை 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து காலபைரவருக்கு சங்காபிஷேகமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார்.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதே போன்று, கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.

