ADDED : ஏப் 26, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : குடிபோதையில் ஆட்டோ டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் அடுத்த பாதிரிக் குப்பத்தைச் சேர்ந்தவர் சஞ்சய், 23; ஆட்டோ டிரை வர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி நதியா, 23; என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கமுடைய இவர், போதையில் அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.
நேற்று நள்ளிரவு குடிபோதையில், தனது வீட்டின் கிரில் கேட்டில் துாக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன், கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

