/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோ-கோ போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
கோ-கோ போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : செப் 02, 2024 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வள்ளலார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கோ - கோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வள்ளலார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் புவனகிரி வட்டார அளவிலான 14, 17, 19 வயதிற்குட்டோருக்கான கோ-கோ போட்டி நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலர் ராமலிங்கம், இணைசெயலர் விவேக்ராம், தலைமை ஆசிரியர் சுமதி ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.