/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேகத் தடையில் விழுந்த வங்கி அதிகாரி பலி
/
வேகத் தடையில் விழுந்த வங்கி அதிகாரி பலி
ADDED : ஆக 04, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் தனியார் வங்கி அதிகாரி சாலை விபத்தில் இறந்தார்.
கடலுார், உண்ணாமலை செட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் சேகர் மகன் கிருபாகரன்,30; புதுச்சேரி தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்தார். இவர், ஆல்பேட்டையில் இருந்து புதிய கலெக்டர் அலுவலகம் வழியாக நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றுள்ளார்.
புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் வேகத் தடையில் ஏறி இறங்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.
கடலுார், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் நேற்று இறந்தார். விபத்து குறித்து கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.