sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருதை நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை

/

விருதை நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை

விருதை நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை

விருதை நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகை


ADDED : ஜூன் 30, 2024 05:21 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம் நகராட்சி, 15வது வார்டு, திருவள்ளுவர் நகர், 8வது தெருவில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் சிரமமடைந்து வந்தனர். இது குறித்து வார்டு கவுன்சிலர், நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலி குடங்களுடன், நகராட்சி அலுவலகத்தை நேற்று மதியம் 12:30 மணியளவில் முற்றுகையிட்டனர். அப்போது, முறையாக குடிநீர், வீட்டு வரி செலுத்தி வரும் நிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். பள்ளி செல்லும் மாணவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமமடைகின்றனர் எனக் கூறி கோஷமிட்டனர். அவர்களிடம், விருத்தாசலம் போலீசார், நகராட்சி அதிகாரிகள், உடனடியாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us