sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் மீது லாரி மோதல்: தாய் பலி; மகன் படுகாயம்

/

பைக் மீது லாரி மோதல்: தாய் பலி; மகன் படுகாயம்

பைக் மீது லாரி மோதல்: தாய் பலி; மகன் படுகாயம்

பைக் மீது லாரி மோதல்: தாய் பலி; மகன் படுகாயம்


ADDED : மே 30, 2024 04:25 AM

Google News

ADDED : மே 30, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: மகனுடன் பைக்கில் சென்ற தாய் லாரி மோதி இறந்தார்.

கடலுார் அடுத்த திருப்பணாம்பாக்கத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி,27; தனியார் கம்பெனி ஊழியரான இவர் நேற்று காலை 10:30 மணியளவில், பிஒய்-05 ஆர்-5502 பதிவெண் கொண்ட பல்சர் பைக்கில், தனது தாய் குள்ளம்மாள்,61; ஏற்றிக் கொண்டு புதுச்சேரி குறிஞ்சி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புறப்பட்டார்.

தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் ஓடை பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டி.என். 46 எம் 8543 பதிவெண் கொண்ட டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. அதில், குருமூர்த்தி, அவரது தாய் குள்ளம்மாள் இருவரும் சாலையில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அவர்களை போக்குவரத்து போலீசார் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களை டாக்டர் பரிசோதித்தில் குள்ளம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். குருமூர்த்திக்கு, கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us