நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கார்குடல் காலனியில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி இரவு பைக்கை திருட முயன்ற இருவரை கிராம மக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இதில் இருவர் தப்பினர்.
விசாரணையில் இருவரும் கொள்ளிடம் விஜய், 23; வதிஷ்டபுரம் பாலகணபதி, 21, என்பது தெரிய வந்தது. புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர்.மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.