ADDED : ஏப் 27, 2024 04:37 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த இருசாளகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் அழகுராஜா, 28; இவர், நேற்று மதியம் 1.45 மணியளவில், தனது சகோதரர் நிச்சயதார்த்த விழாவிற்கு, விருத்தகிரீஸ்வரர் கோவில் தெற்கு கோபுர வாசல் முன் பல்சர் பைக்கை நிறுத்திவிட்டு சென்றார்.
அப்போது, பைக்கை வேறு யாரோ ஒருவர் எடுத்துச் செல்வதாக கிடைத்த தகவலின்பேரில், வேறுறொரு பைக்கில் விரட்டிச் சென்று, பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில், அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த நின்னியூரை சேர்ந்த செல்வம் மகன் தேசிங்கு, 28; என தெரியவந்தது. உடன் அவரை கைது செய்தனர்.
கடலுார்
திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் கம்மியம்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர், காரைக்காடு குணசேகர், 52; என்பதும், கடந்த 9ம் தேதி, கம்மியம்பேட்டையைச் சேர்ந்த ரகோத்தமன் வீடு முன் நிறுத்தியிருந்த காளிதாஸ் என்பவரின் பைக்கை திருடியதையும் ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து குணசேகரை கைது செய்தனர்.

