ADDED : ஆக 28, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று கச்சிராயநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விருத்தாசலம் திரு.வி.க., நகரைச் சேர்ந்த குமார், 40, என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, குமாரை கைது செய்தனர்.