/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணன் குத்திக் கொலை: விருத்தாசலத்தில் தம்பி கைது
/
அண்ணன் குத்திக் கொலை: விருத்தாசலத்தில் தம்பி கைது
ADDED : செப் 05, 2024 05:04 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, அண்ணனை குத்தி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் செல்வமணி, 54, கட்டட மேஸ்திரி. இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த அவரது சித்தி மகன் சுப்ரமணியன்,43, கொத்தனார் வேலை செய்து வந்தார்.
சம்பள பாக்கி குறித்து சுப்ரமணியன் கேட்டதற்கு செல்வமணி இழுத்தடித்து வந்துள்ளார். மேலும், இவர்களுக்கு இடையே இடப் பிரச்னை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுப்ரமணியன் அவரது மனைவி கலைச்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவரையும் சமாதானம் செய்ய செல்வமணி, அவரது மனைவி ஜோதி ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது, ஆத்திரமடைந்த சுப்ரமணியன், செல்வமணியின் முதுகில் கத்தியால் குத்தினார்.
இதில், சம்பவ இடத்திலேயே செல்வமணி இறந்தார். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வமணியின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து, சுப்ரமணியனை கைது செய்தனர்.