/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருமகாரிய கொட்டகை பயன்பாட்டுக்கு வருமா?
/
கருமகாரிய கொட்டகை பயன்பாட்டுக்கு வருமா?
ADDED : ஜூன் 21, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வான்பாக்கம் சாலையில், செல்லியம்மன் கோவில் அருகே 10 லட்சம் ரூபாய் செலவில் கருமகாரிய கொட்டகை கட்டப்பட்டது. பணி முடிந்து இரண்டு மாதத்துக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.
இதனால், திறந்த வெளியிலேயே காரியம் செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது.
மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், பொதுமக்கள் சிரமத்தை போக்க, விரைந்து திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.