sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு சார் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

/

போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு சார் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு சார் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு சார் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு


ADDED : மே 07, 2024 10:22 PM

Google News

ADDED : மே 07, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி:போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தது தொடர்பாக சார் - பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 59. இவருக்கு, மணம்தவிழ்ந்தபுத்துார் கிராமத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 38 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலம், அதே கிராமத்தை சேர்ந்த திரிசங்கு பெயரில் கிரயமாகி உள்ளதாக கலியமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து கலியமூர்த்தி அளித்த புகார்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தின் பத்திரம் மற்றும் அவரது வாக்காளர் அடையாள அட்டையை திரிசங்கு திருடி, கலியமூர்த்தி போட்டோவுக்குப் பதில் மூர்த்தி என்பவர் போட்டோவை வைத்து, போலி வாக்காளர் அடையாள அட்டை திரிசங்கு தயாரித்துள்ளார்.

இந்த போலி வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாக கொண்டு கலியமூர்த்தி நிலத்தை மூர்த்தியை வைத்து புதுப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் திரிசங்கு கிரையம் பெற்றது தெரிய வந்தது.

அதன்பேரில் திரிசங்கு, மூர்த்தி, பத்திர எழுத்தர் சீனுவாசன், மணம்தவிழ்ந்தபுத்துார் சீனுவாசன், திருநாவுக்கரசு, சார் பதிவாளர் பாலாஜி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us