/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
/
கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED : ஜூலை 14, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், குண்டுமணி அய்யனார் கோவிலில் இருந்து சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அம்மனுக்கு தீபாராதனை செய்து சாகை வார்த்தனர்.
மாலை அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார்.இரவு கெங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வானவேடிக்கையுடன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.