/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுாற்றாண்டு பேச்சு போட்டி அமைச்சர் அழைப்பு
/
நுாற்றாண்டு பேச்சு போட்டி அமைச்சர் அழைப்பு
ADDED : ஆக 24, 2024 06:40 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், தி.மு.க., இளைஞர் அணி சார்பில், கருணாநிதி நூற்றாண்டு பேச்சு போட்டி இன்று நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் சிதம்பரம், வண்டிகேட்டில் உள்ள கிருஷ்ணா மஹாலில் இன்று கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு 'என் உயிரினும் மேலான கலைஞர் நூற்றாண்டு' பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
அதில், பங்கேற்க மாணவ, மாணவிகள் காலை 7:00 மணிக்கு, கிருஷ்ணா கிராண்ட் மகாலில் செய்ய வேண்டும்.
கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து பரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

