sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகர பகுதி விவசாயிகளுக்கு மத்திய அரசு கவுரவ நிதி

/

நகர பகுதி விவசாயிகளுக்கு மத்திய அரசு கவுரவ நிதி

நகர பகுதி விவசாயிகளுக்கு மத்திய அரசு கவுரவ நிதி

நகர பகுதி விவசாயிகளுக்கு மத்திய அரசு கவுரவ நிதி


ADDED : மார் 03, 2025 07:40 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால் நெல்லிக்குப்பம் நகர பகுதி விவசாயிகளுக்கு மத்திய அரசின் கவுரவ நிதி நிலுவை தொகையுடன் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு கவுரவ நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் விவசாயிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 3 முறை என ஆண்டுக்கு 6 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, நகர பகுதி விவசாயிகள் பதிவு செய்ய முடியவில்லை. அதேபோல் ஆதார் அட்டைபோல் ஒவ்வொரு விவசாயிக்கும் தனி குறியீடு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இரு திட்டத்திலும் நகர பகுதி விவசாயிகள் சேர முடியாத நிலை உள்ளதாக, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அண்ணா கிராமம் வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் முயற்சியால், நெல்லிக்குப்பம் நகர பகுதி விவசாயிகளுக்கு 8 நிலுவை தொகையுடன் மத்திய அரசின் கவுரவ நிதி கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் விவசாயிகளுக்கு தனி குறியீடு எண் அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us