தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செயின் பறிப்பு; இருவர் கைது

செயின் பறிப்பு; இருவர் கைது

செயின் பறிப்பு; இருவர் கைது


ADDED : ஜூலை 23, 2024 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2024 12:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்,29; நேற்று மதியம் போத்திரமங்கலம் கிராம வயவெளியில் துாங்கினார்.

அப்போது அவ்வழியே வந்த பட்டூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்,35, மற்றும் மாயவன்,23, ஆகியோர், ஜெயக்குமாரின் கழுத்திலிருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்துச்சென்றனர். சிறிதுநேரம் கழித்து கண்விழித்துப் பார்த்த ஜெயக்குமாரின் செயினில் இருந்த 2 கிராம் டாலர் மட்டுமே கிடந்தது. இதுகுறித்து ஜெயக்குமார் அளித்த புகாரில், ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் செந்தில் மற்றும் மாயவன் செயினை திருடியது தெரியவந்து, அவர்களை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us