/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆசிரியையிடம் செயின் பறிப்பு; சிதம்பரம் அருகே துணிகரம்
/
ஆசிரியையிடம் செயின் பறிப்பு; சிதம்பரம் அருகே துணிகரம்
ஆசிரியையிடம் செயின் பறிப்பு; சிதம்பரம் அருகே துணிகரம்
ஆசிரியையிடம் செயின் பறிப்பு; சிதம்பரம் அருகே துணிகரம்
ADDED : ஜூன் 29, 2024 06:10 AM
சிதம்பரம் : ஆசிரியையிடம் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம், தேரடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தம்பிபிள்ளை மனைவி ரம்யாதேவி,42; கடவாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர். இவர், நேற்று மாலை பள்ளி முடிந்து, சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் புறவழிச்சாலையில் உள்ள சாலியன்தோப்பு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், ரம்யாதேவி அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.