ADDED : ஜூலை 21, 2024 06:17 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம், வழி கேட்பதுபோல் நடித்து, 3 சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் விஜயமாநகரம், புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி ஆதிலட்சுமி, 55.இவர் நேற்று அதேபகுதியில் நடந்த நுாறுநாள் வேலை திட்ட பணிக்கு சென்றுவிட்டு பகல் 12:00 மணியளவில் வீடு திரும்பினார்.விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை, விஜயமாநகரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் நடந்து சென்றபோது, அவரது பின்னால், பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள், கோவிலுக்கு செல்லவழி கேட்பதுபோல் ஆதிலட்சுமியிடம் பேசி, அவரது கழுத்தில் கிடந்த தாலி 3 சவரன் செயினை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.