ADDED : ஜூன் 30, 2024 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டியில் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சிவா, கமிஷனர் ப்ரீத்தா, சுகாதார அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நல உறுப்பினர் அல்போன்சா சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மண்டல துணை தாசில்தார், பள்ளி தலைமையாசிரியை, ஆரம்ப சுகாதார மருத்துவர், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.