sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொதுநல கூட்டமைப்பினர் கருப்பு கொடியுடன் போராட்டம்

/

பொதுநல கூட்டமைப்பினர் கருப்பு கொடியுடன் போராட்டம்

பொதுநல கூட்டமைப்பினர் கருப்பு கொடியுடன் போராட்டம்

பொதுநல கூட்டமைப்பினர் கருப்பு கொடியுடன் போராட்டம்


ADDED : செப் 17, 2024 06:19 AM

Google News

ADDED : செப் 17, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுநல அமைப்பினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாநகராட்சியில் நேற்று மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில், கடலுார் புதிய பஸ் நிலையம் எம்.புதுாரில் அமைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தகவல் பரவியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுார் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். வெண்புறா பொதுநல பேரவை தலைவர் சண்முகம், தனியார் பஸ் தொழிலாளர் சங்க தலைவர் செல்வம், பஸ் நிலைய சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சுகுமார், ேஷர் ஆட்டோ ஓட்டுநர், உரிமையாளர் சங்க தலைவர் ராயர் ராஜங்கம் முன்னிலை வகித்தனர்.

இதில், புதிய பஸ் நிலையம் எம்.புதுாரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us