sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அண்ணாகிராமத்தில் திட்டப் பணிகள் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

/

அண்ணாகிராமத்தில் திட்டப் பணிகள் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

அண்ணாகிராமத்தில் திட்டப் பணிகள் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

அண்ணாகிராமத்தில் திட்டப் பணிகள் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு


ADDED : ஆக 25, 2024 11:47 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அண்ணாகிராமம ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணி நடந்து வருவதையும், சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் குப்பை தரம் பிரித்தல் கூடம், அமைக்கும் பணி மற்றும் 42.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், மேலும் அவ்வூராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திள் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெருமளவில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மற்றும் 9.41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அய்யனார் கோயில் குளம் துார்வாரும் பணிகள் நடைபெறுவதையும், சன்னியாசிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 31.42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பள்ளவராயநத்தம் ஊராட்சியில் குப்பை தரம் பிரித்தல் கூடத்தின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் அதனருகே15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காகுப்பை உரக்குழிகள் அமைக்கப்பட்டு வருவதையும், பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின்கீழ் வீடு கட்டுமானப் பணிகள் நடந்து வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us