ADDED : ஜூன் 18, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடுர் அகரம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன், 43; இவரது மகள் பிரியதர்ஷினி, 19; வடலுார் தனியார் கல்லுாரி ஒன்றில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பிரியதர்ஷினி வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து வைத்தியநாதன் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
