sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி; கலெக்டர் திடீர் ஆய்வு

/

அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி; கலெக்டர் திடீர் ஆய்வு

அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி; கலெக்டர் திடீர் ஆய்வு

அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி; கலெக்டர் திடீர் ஆய்வு


ADDED : செப் 02, 2024 01:10 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : கிள்ளை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 90 லட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்படும் கூடுதல் கட்டட பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

கிள்ளை அடுத்த கொடிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய கட்டட வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

மாணவர்களின் நலன்கருதி, தமிழக அரசு மாவட்ட கனிமவள நிதியின் கீழ், ரூ. 90 லட்சம் மதிப்பில் பள்ளியில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணியை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். பணியை, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், சி.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வது குறித்தும், கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், செயற்பொறியாளர் பிரமிளா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us